Posts

Showing posts from December, 2021

திருக்குறள் - வாய்மை - குறள் - 292

Image
  குறள் 292: பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின் மு . வ உரை : குற்றம் தீர்த்த நன்மையை விளைக்குமானால் பொய்யாச் சொற்களும் வாய்மை என்று கருதத் தக்க இடத்தைப் பெறும் . சாலமன் பாப்பையா உரை : குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம் . கலைஞர் உரை : குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும் எனது கருத்து : இந்த குறளை போல் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்ட குறள் வேறு இல்லை என்றே சொல்ல வேண்டும் ! தமிழில் அக்காலத்தில் கேள்விக்குறிகளோ , ஆச்சரிய குறிகளோ , முற்றுப்புள்ளிகளோ இருக்கவில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும் . பொய்மையும் வாய்மை இடத்து - பொய்யும் உண்மையாகலாம் , என்கிறார் . எப்பொழுது ? புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனில் . அதாவது , புரை இல்லாத நன்மை . புரை என்றால் என்ன ?  கண்ணில் புரை விழுந்து விட்டது என்றால் பார்வை மங்கலாகிவிடும் . புரை என்றால் ஏதாவது ஒரு குற்றம் ; அல்ல

திருக்குறள் - வான் சிறப்பு - குறள் - 17

Image
  குறள் 17: நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின் மு . வ உரை : மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால் , பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும் சாலமன் பாப்பையா உரை : பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால் , நீண்ட கடல் கூட வற்றிப் போகும் கலைஞர் உரை : ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும் மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும் என் கருத்து : ‘ நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் ’, அதாவது மிகப்பெரிய கடலும் தன் இயல்பில் இருந்து குறைபடும் . எப்பொழுது குறைபடும் ? தடிந்தெழுலி தான் நல்காவிடின் , என்கிறார் . தடிந்தெழுலி என்றால் திரளாக கடலில் இருந்து எழுந்தது ; அதாவது , பெரும் கார் மேகம் . கடலில் இருந்து கிளம்பிய கார்மேகம் , நீரை கொடுக்காமல் இருந்து விட்டால் . அதாவது , திரளாக பெரும் கார் மேகமாக கடலில் இருந்து எழுந

திருக்குறள் - வான் சிறப்பு - குறள் - 16

Image
  குறள் 16: விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண் பரிது மு . வ உரை : வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல் , உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது சாலமன் பாப்பையா உரை : மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால் , பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும் கலைஞர் உரை : விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும் என் கருத்து : விசும்பு என்பது மேகத்தை குறிக்கும் சொல் . விசும்பல் என்றால் சிறு சத்தத்துடன் அழுவது . விசும்பு என்பன சிறு சத்தம் செய்யும் மேகங்கள் . மேகங்கள் பேர் இடி சத்தத்தோடு வரும் . இவை கீழே அருகாமையில் இருக்கும் மேகங்கள் . மேலே உயரத்தில் இருக்கும் மழை கொடுக்கும் மேகங்களோ , சிறு உருட்டல் சத்தத்துடன் தான் இருக்கும் . இவைகளே விசும்பு எனப்படும் மேகக்கூட்டங்கள் .  அதே சமயத்தில் இந்த விசும்பு மேகங்கள் , கார்மேகங்களாய் நீரை கொட்டி தீர்க்கும் மேகங்கள் அல்ல . கொஞ்சமாகத்தான் இவைகள் மழை பெய

திருக்குறள் - வான் சிறப்பு - குறள் - 15

Image
  குறள் 15: கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை மு . வ உரை : பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை ; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும் சாலமன் பாப்பையா உரை : பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும் ; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான் கலைஞர் உரை : பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும் , பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும் என் கருத்து : இந்த குறளை , கெடுப்பதும் மழை . அப்படி கெட்டவர்க்கு அதரவாக வேறு செயல்களினால் காத்து எடுப்பதும் மழை என்று பார்க்க வேண்டும் . கெடுப்பது மழை என்றால் பெய்யாமல் கெடுப்பது மட்டுமல்ல . பெய்து கெடுப்பதும் மழைதானே ?! அளவிற்கு மீறினால் மழையும் மரணத்தை கொடுக்கும் . அதே போல , வாழ்க்கை அழிந்து போய் நிற்க கூடிய ஒருவனுக்கு அதரவாக , அதே மழைதான் வாழ்வினை கொடுக்கும் . இந்த குறளின் அருமை என்ன என்றால் , மழை என்ற சொல்லிற்கு அன்பு