ஏழறிவு
  ஐந்து  அறிவு  மிருகம் !  அதிலிருந்து  பிறந்ததடா  ஆறறிவு  மனிதன் !   பரிணாம  வளர்ச்சிகள்  மனிதன்  பிறந்த  பின்னாலே  நின்றாவிட்டது ?   இயற்கை  என்றுமே  வளரும் !  ஒர்  அறிவு  ஈர்  அறிவு  ஆகும் !   ஈர்  அறிவு  மூன்று  அறிவு  ஆகும் .  மூன்று  நான்காகும் , நான்கு  ஐந்தாகும் !   பல  மிருகங்கள்  ஐந்தறிவு  ஆனப்பின்னாலே  ஆறு  அறிவும்  பிறந்ததடா !   மனிதன்  ஒருவனே  ஆறாய்  நிற்கின்றான் !   பல  மிருகம்  ஐந்தறிவாய்  இருக்கும்    பொழுது ,  ஆறறிவு  மிருகங்களும்  பலவாக  வேண்டுமே !   பரணாம  வளர்ச்சி    தொடராமல்  நிற்குமா ?   ஆறறிவு  மிருகங்கள்  பலவாக  வந்தப்பின்னே  ஏழறிவு  பிராணிகளும்    நடக்கும்  இம்மண்ணிலே !   ஏழு  அறிவு  என்பது    எப்படி  இருக்கும் ,  யாருக்கு  தெரியும் ?  வந்த  பின்னாலே  மயக்கங்கள்  தீரும் ! நம்  வாழ்க்கையை  கண்டிப்பாய்  விஞ்சும் !