Posts

Showing posts from November, 2021

திருக்குறள் - கடவுள் வாழ்த்து - குறள் - 3.

Image
  குறள் 3: மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் மு . வ உரை : அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் , இன்ப உலகில் நிலைத்து வாழ்வார் சாலமன் பாப்பையா உரை : மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர் கலைஞர் உரை : மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு , உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும் எனது பார்வை . மலர்மிசை ஏகினான் - மலர்களின் மேல் இருப்பவன் . மலர் மேல் யார் இருப்பார்கள் ? இறைவனை குறித்து சொல்லுகின்ற பொழுது , மலர் மேல் அமர்ந்து இருப்பவராகத்தான் பல இடங்களில் அவர் காட்டப்படுகிறார் . மலர்கள் தான் உயிரின் ஆரம்ப நிலை . அதாவது , மலர்களே காயாகி , பின் கனியாகி , விதையாகி , அதன் பின் மரமாகி , மிருகங்களுக்கு இரையாகி , அந்த மிருகங்கள் ஊண் உண்ணும் மிருகங்களுக்கு உணவாகி , தொடரும் இந்த உணவு சங்கிலியின் ஆரம்பம் என்று பார்த்தால் அது மலர் த

திருக்குறள் - கடவுள் வாழ்த்து - குறள் - 2

Image
  குறள் 2: கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் மு . வ உரை : தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால் , அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன ? சாலமன் பாப்பையா உரை : தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர் , படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன ? கலைஞர் உரை : தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன் ? ஒன்றுமில்லை மற்றவர்களின் உரையை மேலே குறிப்பிட்டுள்ளேன் .  எனது கேள்வி , இறைவனை வணங்குவது என்பது சாதாரணமாக எல்லோரும் செய்வது ; இதற்கு கல்வி அறிவு தேவையா என்ன ? வாலறிவன் என்பது மிக்க அறிவு கொண்டவன் என்று அர்த்தம் கொள்ளலாம் . தூய அறிவு கொண்டவன் ; ஆழமான அறிவு கொண்டவன் என்றும் கொள்ளலாம் . அப்படி இருப்பவர் இறையாகவும் இருக்கலாம் ; சாதாரண மனிதனாகவும் இருக்கலாம் .  சாதாரண மனிதன் ஆழ்ந்த அறிவை பெறும் பொழுது , இறைவனின் நிலையை அடைய முடியும் என்பதை சொல்லுகிறாரோ ?

திருக்குறள் - கடவுள் வாழ்த்து - முதல் குறள்.

Image
ஒவ்வொரு புத்தகத்தை ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் , நமக்கு புது புது அர்த்தங்கள் தோன்றுவது சகஜம் .  திருக்குறள் ஒரு ஆழமான எண்ணங்கள் நிறைந்த ஒரு அருமையான படைப்பு . பிற்கால அவ்வையார் சொல்லுவது போல , ‘ அணுவை துளைத்து ஏழ்கடலை புகட்டி / குறுக தரித்த குறள் ’. அணுவே சிறியது . அதனை துளைத்தால் அந்த துளை எவ்வளவு சிறியதாக இருக்கும் ? அந்த சிறு துளையின் உள்ளே ஏழ் கடலை புகுத்தினால் ? அவ்வளவு அறிவையும் இரண்டு அடிகளில் கொடுத்து இருக்கிறார் வள்ளுவர் . அசாதாரண சிந்தனைகள் ! வள்ளுவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் எத்தனை ஆழமான எண்ணங்களை கொடுக்கின்றன என்பது விந்தையே . யோசிக்க யோசிக்க அவைகளின் ஆழம் மிகுந்து கொண்டே போகிறதே ஒழிய குறைந்த பாடில்லை ! ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் புது அர்த்தம் தோன்றுகிறது . அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் . ஏற்று கொள்பவர்கள் ஏற்று கொள்ளுங்கள் . மற்றவர்கள் விட்டு விடுங்கள் ! நான் ஏதோ உளறுகிறேன் , என்று . முதல் குறள் என்றுமே என்னை கவர்ந்த ஒன்று . அகர முதல எழுத்தெல்லாம் ஆதி   பகவன்